கூடலூரைஅடுத்துள்ள ஓவேலி பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு யானைகள் தாக்கியதில் வீடு சேதமடைந்தது.
கூடலூர் வட்டத்திலுள்ள ஓவேலி பேரூராட்சி, ஆத்தூர் கிராமத்தினுள் நள்ளிரவில் நுழைந்த யானைகள் அங்குள்ள சந்தனத்தேவன் என்பவரது வீட்டைச் சுற்றி வளைத்து தாக்கின. வீட்டினுள் தூங்கிக் கொண்டிருந்த சந்தனத்தேவன், யானைகள் வீட்டைத் தாக்குவதை உணர்ந்து அருகிலுள்ளவர்களை அழைத்துள்ளார்.
உடனே அருகிலிருந்தவர்கள் ஒன்றுகூடி சத்தமிட்டு யானைகளை விரட்டியுள்ளனர். அதற்குள் வீட்டின் பின்புறமுள்ள சமையலறையை இடித்து சேதப்படுத்திவிட்டுச் சென்றன.
யானைகளால் சேதமடைந்த வீட்டுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மாவட்ட வன அலுவலருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.