புளூ மவுன்டன் நுகர்வோர் பாதுகாப்புக் குழுவின் செயற்குழுக் கூட்டம் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
அமைப்பின் செயலாளர் ராஜன் வரவேற்றார். இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
கோத்தகிரி பகுதியில் மின் மயானம் அமைக்க அரசை வலியுறுத்துவது, கோத்தகிரி அரசு மருத்துவமனையில் மாதம் ஒருமுறை புளூமவுன்டன் நுகர்வோர் பாதுகாப்புக் குழு சார்பாக தூய்மைப் பணியை மேற்கொள்வது, கோத்தகிரி பகுதியில் செயல்படும் ஒருசில காஸ் ஏஜென்சியில் நுகர்வோருக்கு சரிவர சிலிண்டர் வழங்காதது குறித்து மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்குக் கொண்டுசென்று தீர்வு காண்பது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் சங்கப் பொருளாளர் மரியம்மா, துணைத் தலைவர்கள் பீட்டர், கிரேஸி, இணைச் செயலாளர்கள் முகமது சலீம், ரோஸ்லின் ஆகியோர் கலந்து கொண்டனர். கூடுதல் செயலாளர் சீனிவாசன் நன்றி கூறினார்.