பந்தலூரை அடுத்துள்ள தொண்டியாளம் பகுதியில் யானை தாக்கியதில் முதியவர் காயமடைந்தார்.
நீலகிரி மாவட்டம், பந்தலூரை அடுத்துள்ள தொண்டியாளம் பகுதியைச் சேர்ந்தவர் காளிமுத்து (60).
இவர், சனிக்கிழமை காலை 6 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே வந்தபோது வாசலில் நின்றிருந்த இரண்டு யானைகள் இவரைத் தாக்கி தூக்கி வீசியுள்ளது.
இதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் யானைகளை சப்தமிட்டு விரட்டியுள்ளனர். உடனடியாக, காயமடைந்த காளிமுத்துவை பந்தலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று முதலுதவிக்குப் பிறகு கூடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
காளிமுத்துவுக்கு எலும்புகளில் முறிவு ஏற்பட்டுள்ளதால் மேல் சிகிச்சைக்காக அருகிலுள்ள கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் உள்ள சுல்தான் பத்தேரி தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.