குன்னூரில் தடைசெய்யப்பட்ட போதை பாக்குகளை காவல் துறையினர் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.
குன்னூரில் தடைசெய்யப்பட்ட போதை பாக்குகள் விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினக்குத் தகவல் கிடைத்தது.
இதனடிப்படையில், குன்னூர், வி.பி. தெருவில் உள்ள தியாகு என்பவரின் கிடங்கில் காவல் துறையினர் சோதனை செய்தனர். இதில் அங்கு ரூ. 30 ஆயிரம் மதிப்புள்ள பான்பராக் உள்ளிட்ட போதை பாக்குகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அவற்றை குன்னூர் காவல் துறையினர் கைப்பற்றினர்.
இதுகுறித்து குன்னூர் காவல் ஆய்வாளர் சுப்பிரமணியம் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.