ரெப்கோ வங்கி சார்பில் அரசுப் பள்ளிக்கு ரூ.5 லட்சம் நிதியில் கலையரங்கம்

ரெப்கோ வங்கி சார்பில் கொளப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.5 லட்சம் செலவில் கலையரங்க கட்டுமானப் பணிக்கான பூமிபூஜை சனிக்கிழமை நடைபெற்றது. 


ரெப்கோ வங்கி சார்பில் கொளப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.5 லட்சம் செலவில் கலையரங்க கட்டுமானப் பணிக்கான பூமிபூஜை சனிக்கிழமை நடைபெற்றது. 
 ரெப்கோ வங்கியின் தாயகம் திரும்பியோர் நல அறக்கட்டளை சார்பில் பந்தலூர் வட்டத்தில் உள்ள கொளப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு கலையரங்கம் கட்டுமானப் பணிக்கான பூமிபூஜை நிகழ்ச்சிக்கு ரெப்கோ வங்கியின் இயக்குநர் மகாலிங்கம் தலைமை வகித்தார்.
  இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமையாசிரியர் அமீன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ராஜா, ரெப்கோ வங்கி டெலிகேட்ஸ் யூனியனின் தென்னிந்தியத் தலைவர் சு.ஆனந்தராஜா, மாவட்டப் பிரதிநிதி வேலுராஜேந்திரன், மாவட்டத் தலைவர் கு.கிருஷ்ணபாரதியார், பிரதிநிதிகள் லோகநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com