காஷ்மீரில் வீர மரணமடைந்த வீரர்களுக்கு கூடலூரில் அஞ்சலி

காஷ்மீரில் வீர மரணமடைந்த பாதுகாப்புப் படை வீரர்களுக்கு கூடலூரில் பல்வேறு அமைப்புகள் சார்பில் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

காஷ்மீரில் வீர மரணமடைந்த பாதுகாப்புப் படை வீரர்களுக்கு கூடலூரில் பல்வேறு அமைப்புகள் சார்பில் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
கூடலூரில் முன்னாள் ராணுவ வீரர்கள் சார்பில் மெளன ஊர்வலம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, வீர மரணமடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி காந்தி திடலில் நடைபெற்றது.
கூடலூரில் உள்ள காசிகா இலவச ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம், கூடலூர் பசுமை மீட்புக் குழு ஆகியவற்றின் சார்பில் ஊர்வலமும், காந்தி திடலில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் சத்தியநேசன், முன்னாள் ராணுவ வீரர் சிவா, காசிகா இலவச ஐ.ஏ.எஸ். பயிற்சி மைய நிறுவனர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com