தமிழ்ச் சங்கம் சார்பில் பொங்கல் கலை இலக்கிய விழா

நீலகிரி மாவட்ட தமிழ்ச் சங்கம் சார்பில் பொங்கல் கலை இலக்கிய விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

நீலகிரி மாவட்ட தமிழ்ச் சங்கம் சார்பில் பொங்கல் கலை இலக்கிய விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
சங்கத்தின் சார்பில் நடைபெற்ற 18ஆம் ஆண்டு கலை இலக்கிய விழாவுக்குத் தமிழ்ச் சங்கத் தலைவர் கவிஞர் மணிவண்ணன் தலைமை வகித்தார். 
பா.பால்வண்ணன் குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தார். குறிஞ்சி இலக்கிய மன்றத் தலைவர் கூடலூர் ராமமூர்த்தி, சட்ட ஆலோசகர் வே.கிருஷ்ணகுமார், எழுத்தாளர் போ.மணிவண்ணன், முரளி கார்மேகம் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். செயலாளர் அரு.நாகநாதன் வரவேற்றார்.ஜெ.ஸ்ரீகாந்த் நன்றி கூறினார்.
மாவட்ட அளவில் நடைபெற்ற  பள்ளி மாணவர்களுக்கான கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளும்  சான்றிதழும் வழங்கப்பட்டன. தொடர்ந்து பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், மாணவ, மாணவிகளின் நாட்டிய நிகழ்ச்சிகள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com