நீலகிரி

யானைகள் ஊருக்குள் வருவதைத் தடுக்க வீடுகளில் வாழை, பலா மரங்களை வளர்க்க வேண்டாம்: வனத் துறை அறிவுறுத்தல்

DIN

காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் இருக்க வீடுகளில் வாழை, பலா மரங்களை வளர்க்க வேண்டாம் என்று பொதுமக்களுக்கு வனத் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். 
குன்னூர்  வனக் கோட்டத்தில் பர்லியாறு,  குஞ்சப்பனை, ஆடர்லி,  டைகர்ஹில், கொலக்கம்மை  ஆகிய வனச் சரகங்கள் உள்ளன. இப்பகுதியில் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.  
இவை விவசாயப் பயிர்களை சேதப்படுத்துவது,  குடியிருப்புப் பகுதிகளில் புகுந்து  பொதுமக்களைத் தாக்குவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றன. காட்டுயானைகள் இரவில் ஊருக்குள் புகுந்து வீடுகளை முற்றுகையிடுவதால், பொதுமக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். தற்போது நீலகிரி மாவட்டத்தில் பனிப்பொழிவும், பகலில் வெயிலும் காணப்படுவதால் வனப் பகுதியில் செடி, கொடிகள் கருகி வருகின்றன. இதனால் யானைகள் உணவு தேடி வனப் பகுதியில் இருந்து ஊருக்குள் நுழைய வாய்ப்பு உள்ளது. எனவே, காட்டுயானைகளுக்குப் பிடித்தமான வாழை,  பலா மரங்களை பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் விவசாய நிலங்களில்   வளர்க்க வேண்டாம் என வனத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஜியோ கிரேசியா யங் ஃபேஷன் விருதுகள் 2024 - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

கலங்கடிக்கும் வாழ்க்கைப் பதிவு.. ஆடு ஜீவிதம் - திரை விமர்சனம்!

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

SCROLL FOR NEXT