நீலகிரி மின்பகிர்மான வட்டத்தில் உப்பட்டி, சேரம்பாடி, கூடலூர் மற்றும் அத்திப்பள்ளி துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இந்தத் துணை மின் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஜனவரி 21)காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்: உப்பட்டி துணை மின் நிலையம்: உப்பட்டி, பொன்னானி, தேவாலா, பந்தலூர், அத்திக்குன்னா, கொளப்பள்ளி, எல்லமலை, நாடுகாணி, குந்தலாடி, ராக்வுட், அய்யன்கொல்லி, உட்பிரையார் 3ஆவது டிவிஷன்.
சேரம்பாடி துணை மின்நிலையம்: சேரம்பாடி டவுன், கண்ணம்வயல், நாயக்கன்சோலை, கையுண்ணி, எருமாடு, தாளூர், பொன்னச்சேரா, கக்குண்டி, சோலாடி.
கூடலூர் துணை மின்நிலையம்: கூடலூர், நந்தட்டி, சூண்டி, மரப்பாலம், செம்பாலா, ஓவேலி, 1ஆவது மைல், 2ஆவது மைல், காந்திநகர், முதுமலை, அத்திப்பள்ளி, தொரப்பள்ளி, பாடந்துறை, ஸ்ரீமதுரை, மண்வயல், தெப்பக்காடு, பாட்டவயல், நெலாக்கோட்டை, கார்குடி, தேவர்சோலை.
அத்திப்பள்ளி துணை மின்நிலையம்: அதிகரட்டி, பாலகொலா, தேவர்சோலை, காத்தாடிமட்டம், நுந்தளா, தாம்பட்டி, மணியட்டி, நான்சச், ஆருகுச்சி, உலிக்கல், மேலூர், மஞ்சக்கொம்பை, கிளிஞ்சாடா, சேலாஸ், பாரதிநகர், தூதூர்மட்டம், கரும்பாலம், கிளண்டேல், கொலக்கம்பை, பென்காம்.