சிவன்மலையில் பக்தர்கள் கிரிவலம்

கூடலூரை அடுத்துள்ள சிவன்மலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏராளமான பக்தர்கள் பௌர்ணமியை ஒட்டி கிரிவலம் சென்றனர்.

கூடலூரை அடுத்துள்ள சிவன்மலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏராளமான பக்தர்கள் பௌர்ணமியை ஒட்டி கிரிவலம் சென்றனர்.
கூடலூரை அடுத்துள்ள நம்பாலக்கோட்டை சிவன்மலைக்கு பௌர்ணமி தினத்தை ஒட்டி மாவட்டத்தின் பல பகுதியிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு வந்தனர். 
சிவன்மலை அடிவாரத்தில் திரண்ட பக்தர்கள் சிவன்மலையைச் சுற்றி சுமார் 6 கி.மீ. தொலைவுக்கு கிரிவலம் சென்றனர். பின்னர் மலை உச்சியில் உள்ள சிவலிங்கத்திற்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது.
உலக நலனுக்காகவும், நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குணம் பெறவும், பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் வெற்றி பெறவும் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை சிவன்மலை வளர்ச்சி மற்றும் சமூக நல அறக்கட்டளையின் தலைவர் கேசவன், செயலாளர் நடராஜன், சிவன்மலை நிர்வாகி பாண்டு குருசாமி ஆகியோர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com