ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

உடுமலையில் தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உடுமலையில் தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கச்சேரி வீதியில் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு வட்டாரத் தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். இதில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை 
கொண்டு வர வேண்டும். மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை அரசே பொறுப்பேற்று நடத்த வேண்டும். சத்துணவுப் பணியாளர்கள், கிராம உதவியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. நிர்வாகிகள் மா.பாலசுப்பிரமணியம், சி.ஜெயபிரகாஷ், கே.லிங்கவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com