தொழிலாளர் நலத் துறையில் காலியாக உள்ள முத்திரைக் கொல்லர் பணியிடங்களுக்குத் எழுத்துச் தேர்வு வரும் டிசம்பர் 2 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இது குறித்து திருப்பூர் மாவட்டத் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) லெனின் வெளியிட்டுள்ள செய்தி:
தொழிலாளர் துறையில் கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையர் மண்டலத்தில் காலியாக உள்ள முத்திரைக் கொல்லர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு டிசம்பர் 2 ஆம் தேதி காலை 10 முதல் 12 மணி வரை கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் முகவரிக்கு அஞ்சல் மூலமாக எழுத்துத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு அனுப்பப்பட்டுள்ளது. நுழைவுச்சீட்டு கிடைக்காத தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் திருப்பூர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலகம், அறை எண் 645, 646, 6ஆவது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் என்ற முகவரிக்கு நவம்பர் 29, 30 ஆகிய தேதிகளில் நேரில் அணுகி நுழைவுச் சீட்டினை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
நுழைவுச்சீட்டு பெற நேரில் வரும் விண்ணப்பதாரர்கள் தங்களது ஏதேனும் ஒரு அடையாள அட்டையுடன் அதன் நகலில் தங்களது பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தினை ஒட்டி சான்றொப்பம் பெற்றுவர வேண்டும்.