அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பம்: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

அம்பேத்கர் விருது பெற விண்ணப்பிக்குமாறு மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

அம்பேத்கர் விருது பெற விண்ணப்பிக்குமாறு மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: 
தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்காக பலர் அரிய தொண்டாற்றி வருகிறார்கள். ஆதிதிராவிட மக்களின் முன்னேற்றத்துக்காக தங்களை இணைத்துக்கொண்டு அவர்கள் ஆற்றிவரும் அரிய தொண்டுகளை கருத்தில் கொண்டு, தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு ஆண்டுதோறும் அண்ணல் அம்பேத்கர் விருது வழங்கி மாநில அரசு சிறப்பித்து வருகிறது.
2019-ஆம் ஆண்டு திருவள்ளுவர் திருநாளன்று நடைபெறும் விழாவில் அண்ணல் அம்பேத்கர் விருது பெற விரும்புவோர், தங்களைப் பற்றிய முழு விபரங்களுடன் விண்ணப்பிக்கலாம். சென்னை ஆதிதிராவிடர் நல இயக்குநர் அலுவலகத்திலோ, திருப்பூர் மாவட்ட ஆதிதிராவிடர்-  பழங்குடியினர் நல அலுவலகத்திலோ, இதற்கான விண்ணப்பப் படித்தை பெறலாம். விண்ணப்பங்கள் பத்து நாள்களுக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com