கார் - இருசக்கர வாகனம் மோதல்: இரு இளைஞர்கள் சாவு

திருப்பூர், வேலம்பாளையம் அருகே இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் இரு இளைஞர்கள் சனிக்கிழமை இரவு உயிரிழந்தனர்.

திருப்பூர், வேலம்பாளையம் அருகே இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் இரு இளைஞர்கள் சனிக்கிழமை இரவு உயிரிழந்தனர்.
திருப்பூர், சிறுபூலுவபட்டி பகுதியைச் சேர்ந்தவர் லோகேஷ் (19). அதே பகுதியைச் சேர்ந்தவர் சந்துரு (எ) சந்திரசேகர் (18). இவர்கள் இருவரும் அனுப்பர்பாளையத்தில் இருந்து வேலம்பாளையம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். 
வேலம்பாளையம் அருகே செல்லும் போது, அங்கிருந்து அனுப்பர்பாளையம் நோக்கி வந்த கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த லோகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திருப்பூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் சந்திரசேகர் உயிரிழந்தார். காரை ஓட்டி வந்த ஓட்டுநர் தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து 15.வேலம்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு  செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com