திருப்பூர்

மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: பஞ்சலிங்கம் அருவியில் குளிக்கத் தடை

DIN

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கன மழையால் உடுமலை அருகே உள்ள பஞ்சலிங்கம் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ளது திருமூர்த்திமலை. இங்குள்ள பிரசித்தி பெற்ற அமணலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்யவும், மருத்துவ குணமுள்ள பஞ்சலிங்கம் அருவியில் குளிக்கவும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். 
இந்நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் இங்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு அமணலிங்கேஸ்வரர் கோயிலை காட்டாற்று வெள்ளம்  சூழ்ந்துள்ளது. இதனால் கோயிலில் நடைபெறும் நித்திய பூஜைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கோயில் உண்டியல்கள் பாதுகாப்பாக மூடி வைக்கப்பட்டுள்ளன. 
இங்குள்ள பஞ்சலிங்கம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க கோயில் நிர்வாகம் ஞாயிற்றுக்கிழமை தடை விதித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

இதுவல்லவா ஃபீல்டிங்...

ரஜினி 171: படத் தலைப்பு டீசர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT