அருள்புரத்தில் வியாபாரிகள் சங்கம் அமைக்க முடிவு

பல்லடம் அருள்புரத்தில் வியாபாரிகள் சங்கம் அமைப்பது என அனைத்துக் கட்சி, வியாபாரிகள் சங்கக் கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முடிவு செய்யப்பட்டது


பல்லடம் அருள்புரத்தில் வியாபாரிகள் சங்கம் அமைப்பது என அனைத்துக் கட்சி, வியாபாரிகள் சங்கக் கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முடிவு செய்யப்பட்டது.
பல்லடம், அருள்புரத்தில் விளம்பரப் பதாகை வைத்தது தொடர்பாக நிகழ்ந்த விரும்பத்தகாத சம்பவத்தை அடுத்தும், மதிமுக பிரமுகர் ஆர்.ஆர்.ரவியை சிலர் மிரட்டியதைக் கண்டித்தும் அருள்புரத்தில் அனைத்துக் கட்சி, வியாபாரிகள் சங்கக் கூட்டம் தனியார் குடோனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதற்கு மாவட்ட முன்னாள் கவுன்சிலர் தண்ணீர்பந்தல் ப.நடராஜன் (அதிமுக) தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு உறுப்பினர் ப.கு.சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தார். கரைப்புதூர் ஊராட்சி அதிமுக செயலாளர் விஸ்வநாதன், ஒன்றிய திமுக செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, மதிமுக நிர்வாகிகள் மு.சுப்பிரமணியம், பாலசுப்பிரமணியம், ரவி, வட்டார காங்கிரஸ் தலைவர் கணேசன், முருகதாஸ், ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் பரமசிவம் , வியாபாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், அருள்புரத்தில் நிகழ்ந்த விரும்பதாக சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது சட்டப்படி காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி வரும் 20ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அருள்புரத்தில் கடையடைப்புப் போராட்டம் நடைபெறும். அருள்புரத்தில் உள்ள வணிகர்களை ஒருங்கிணைத்து புதியதாக வியாபாரிகள் சங்கம் தொடங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொறுப்பாளர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com