வெள்ளக்கோவில் ஒன்றிய பகுதிக்கு உள்பட்ட 56 அரசுப் பள்ளிகளுக்கு ரூ. 26.75 லட்சம் மானியம் செவ்வாய்க்கிழமை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இப்பகுதியைச் சேர்ந்த 40 தொடக்கப் பள்ளிகள், 16 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளுக்கு அரசிடமிருந்து இந்த நிதி கிடைக்கப் பெற்றுள்ளது. ரூ. 16.50 லட்சம் நடுநிலைப் பள்ளிகளுக்கும், ரூ.10.25 லட்சம் தொடக்கப் பள்ளிகளுக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது .
இந்த நிதியைப் பயன்படுத்தி பள்ளிகளின் பராமரிப்புப் பணிகள், மின்வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளைச் செய்து கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து தொடர்புடைய 56 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு, வட்டார வள மையத்தில் விவரம் தெரிவிக்கப்பட்டது. மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் சில பள்ளிகளுக்கு இந்த மானியம் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.