பல்லடத்தில் மின் நுகர்வோர் குறைதீர் முகாம் புதன்கிழமை நடைபெறவுள்ளது.
பல்லடம் பகுதி மின் நுகர்வோர் குறைதீர் முகாம் பல்லடம் மின் பகிர்மான வட்டத்தின் மேற்பார்வைப் பொறியாளர் கே.தமிழ்சேகரன் தலைமையில், பல்லடம் மின்வாரியச் செயற்பொறியாளர் அலுவலகத்தில் புதன்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதில், மின் நுகர்வோர் பங்கேற்று தங்களது மின் இணைப்பு, பயன்பாடுகள் குறித்த குறைகள் ஏதேனும் இருந்தால் தெரிவித்துப் பயன்பெறலாம் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் பல்லடம் செயற்பொறியாளர் ஆர்.கோபால் தெரிவித்துள்ளார்.