விவசாயிகள் குறைதீர் கூட்டம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி விடுத்துள்ள அறிக்கை: இந்த மாதத்துக்கான (செப்டம்பர்) விவசாயிகள் குறைதீர் கூட்டம் 28ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில், ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.
அன்றைய தினம் காலை 10.30 மணிக்குத் தொடங்க உள்ள இக்கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவரும் கலந்துகொண்டு தங்களது குறைகளை மனுக்கள் மூலமாகத் தெரிவித்துப் பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.