திருப்பூர்

சுப்ரீம் மொபைல்ஸ் 29ஆவது கிளை திருப்பூர் குமரன் சாலையில் திறப்பு

DIN

திருப்பூர் குமரன் சாலையில் சுப்ரீம் மொபைல்ஸின் 29ஆவது புதிய கிளை வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.
 இக்கிளையை  திரைப்பட நடிகை நிக்கி கல்ராணி திறந்து வைத்தார். இதில், முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், தம்பு கார்ஸ் பாலசந்தர், கே.பி.கே.செல்வராஜ், ஸ்ரீ வாரி கார்டன் இயக்குநர் வெங்கடேஷ், ஆர்.ஏ.குருப்ஸ் ஜெயபால், வஜ்துபால் ரஜினிகாந்த், தங்கவேல், எவரெஸ்ட் மனோஜ், சுப்ரீம் நிறுவன இயக்குநர்கள் தீபபிரியா, ராதாகிருஷ்ணன், சர்வேஸ் ஆதித்தியா, பகவதி ராஜா, கீர்த்தனா நவீன் ஆகியோர் உடனிருந்தனர். 
இந்நிறுவனத்தில் திறப்பு விழா சலுகையாக முதல் 100 வாடிக்கையாளர்களுக்கு ரூ. 999 மதிப்பிலான செல்லிடப்பேசி ரூ.100க்கும், இரண்டாவதாக வரும் 200 வாடிக்கையாளர்களுக்கு ரூ. 200க்கும் என 1,500 வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டது.
அதுமட்டுமின்றி ரூ. 1,000 மதிப்பிலான செல்லிடப்பேசி வாங்குவோருக்கு இலவச குக்கருடன், மேலும் ஆச்சரியம் ஊட்டும் சலுகைகளுடன் ஞாயிற்றுக்கிழமை வரை விற்பனை நடைபெறும் என்றும் நிறுவனத்தின் மண்டல விற்பனை மேலாளர்கள் ஆர்எஸ்எம், அருள்ஜோதி, மகேந்திரன், சிவராஜ், பூபாலன் ஆகியோர் தெரிவித்தனர். மேலும், வாடிக்கையாளர்களுக்கு எலைட் கார்டு திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என மண்டல மேலாளர்கள் ரகு, வினோத் ஆகியோர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

SCROLL FOR NEXT