தேசிய கட்டுமான நிறுவனத்துடன் பில்டர்ஸ் பொறியியல் கல்லூரி ஒப்பந்தம்

காங்கயம் அருகே, நத்தக்காடையூரில் உள்ள பில்டர்ஸ் பொறியியல் கல்லூரியில்


காங்கயம் அருகே, நத்தக்காடையூரில் உள்ள பில்டர்ஸ் பொறியியல் கல்லூரியில் கட்டுமானத் துறையின் மாணவர் மன்றம் மற்றும் ஹைதராபாதில் உள்ள தேசிய கட்டுமான நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகியன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்நிகழ்வில், புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்த தகவல் பலகையை ஹைதராபாத் தேசிய கட்டுமான நிறுவனத்தின் இயக்குநர் எம்.ராஜ் ரெட்டி, பில்டர்ஸ் பொறியியல் கல்லூரியின் தாளாளர் கே.ஆர்.தனசேகர் ஆகியோர் இணைந்து திறந்துவைத்தனர். மாணவர்களின் வேலைவாய்ப்பு, தொழில் முறை கல்வியை மேம்படுத்துதல், கட்டுமானத் துறையின் தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி அளித்தல் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இந்த ஒப்பந்தம் இருக்கும் என கல்லூரி முதல்வர் (பொறுப்பு) எம்.தமிழரசி தெரிவித்தார்.
இதில், ஈபிஈடி கல்வி அறக்கட்டளையின் துணைத் தலைவர் ஆர்.பி.செல்வசுந்தரம், கட்டுமான துறைத் தலைவர் ஜி.கோபாலகிருஷ்ணன், கல்லூரியின் பல்வேறு துறைத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com