வன உயிரின வார விழா

உடுமலை ஆர்ஜிஎம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வன உயிரின வார விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

உடுமலை ஆர்ஜிஎம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வன உயிரின வார விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
  இதற்கு,  ஆரண்யா அறக்கட்டளை அறங்காவலர் நந்தினி ரவீந்திரன் தலைமை வகித்தார். அமராவதி வனச் சரகர் ஆர்.முருகேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். வனத் துறை சார்பில் வன உயிரினங்களைக் காப்பதன் அவசியத்தை வலியுறுத்தி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஓவியம், பேச்சு, கட்டுரை உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. 
   இதில் உடுமலை, மடத்துக்குளம் வட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மொத்தம் 165 பேர் கலந்து கொண்டனர். உலகளாவிய வன உயிரின நிதியம் சார்பில் முல்லை, பசுமைமாறா இயற்கைப் பாதுகாப்பு அறக்கட்டளைச் செயலர் எஸ்.நந்தகோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com