வெள்ளக்கோவில் நகராட்சியில் அனுமதியற்ற வீட்டுமனைகளை வரன்முறைப்படுத்தும் சிறப்பு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
வெள்ளக்கோவில் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற முகாமுக்கு நகராட்சி ஆணையர் சங்கர் தலைமை வகித்தார். நகரமைப்பு ஆய்வாளர் அல்லிமுத்து, நகராட்சி மேலாளர் முத்துவேல், வருவாய் ஆய்வாளர் சின்னதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் 20 பேர் மட்டும் தங்களுடைய மனுக்களைத் தாக்கல் செய்தனர். வரன்முறைக் கட்டணமாக சதுர மீட்டருக்கு ரூ.210 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு சென்ட் இடத்துக்கு ரூ. 8,500 கட்டணமாகும். இந்த முகாம் மீண்டும் வெள்ளிக்கிழமை (செப். 28) நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.