நாட்டு நலப் பணித் திட்ட முகாம்

உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணறு அரசு மேல் நிலைப் பள்ளி சார்பில் நாட்டு நலப் பணித் திட்ட முகாம் நடைபெற்று வருகிறது.

உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணறு அரசு மேல் நிலைப் பள்ளி சார்பில் நாட்டு நலப் பணித் திட்ட முகாம் நடைபெற்று வருகிறது.
உடுமலையை அடுத்துள்ள முக்கோணம் கிராமத்தில் செப்டம்பர் 23 முதல் 29 ஆம் தேதி வரை இந்த முகாம் நடைபெற உள்ளது. முகாமை பள்ளித் தலைமை ஆசிரியர் எஸ்.சேகரன் துவக்கிவைத்தார். என்என்எஸ் திட்ட அலுவலர் செ.சரவணன் முகாம் குறித்து உரையாற்றினார். முகாமில் முதல் நாள் தனித்திறன் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்திய அடிப்படை சட்டங்கள் என்ற தலைப்பில் மாணவ, மாணவிகளுக்கு சட்டம் குறித்து விழிப்புணர்வு கலந்துரையாடல் திங்கள்கிழமை நடைபெற்றது.  மேலும் இலவச மருத்துவ முகாமும் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ஆளுமை திறன், தன்னம்பிக்கை, பேரிடர் மேலாண்மை கருத்தரங்கம், யோகா பயிற்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும்  நடைபெற உள்ளன. மேலும் பள்ளி வளாகம், கோயில் வளாகம், முக்கோணம் கிராமத்தில் உள்ள பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்கள் தூய்மைப் படுத்தும் நிகழ்வும் நடைபெற்று வருகின்றன. செப்டம்பர் 29 ஆம் தேதி நிறைவு நாள் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com