காங்கயம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கத்தின் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு செவ்வாய்க்கிழமை கடனுதவி வழங்கப்பட்டது.
காங்கயம் நகராட்சிப் பகுதியில் உள்ள தென்றல் மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு ஜவுளி வியாபாரம் செய்ய, காங்கயம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கத்தின் சார்பில் சுழல்நிதி கடனாக ரூ.60 ஆயிரம், நேரடிக் கடனாக ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் என மொத்தம் ரூ.3 லட்சம் கடன் தொகை காசோலையாக, சங்கத்தின் தலைவர் ஜி.மணிமாறன் வழங்கினார்.