எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனங்களில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு முன்னாள் படைவீரர்கள் பிப்ரவரி 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பு:
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு பொது நிறுவனங்களில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு முன்னாள் படைவீரர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் 13 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்நிறுவனத்தில் பணியாற்றிட விருப்பம் உள்ள தகுதியான முன்னாள் படைவீரர்கள் www.ongcindia.com என்ற இணையதளம் முலம் வரும் பிப்ரவரி 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். திருப்பூர் மாவட்டத்தைச் சார்ந்த தகுதியும், விருப்பமும் உள்ள முன்னாள் படைவீரர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்து பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.