குன்னத்தூர் அருகே சின்னையகவுண்டம்பாளையத்தில் தம்பதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதில், மனைவி வியாழக்கிழமை உயிரிழந்தார்.
குன்னத்தூர் அருகே ஆதியூர் சின்னையகவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் நூல் வியாபாரி ரவிசங்கரன் (45). இவரது மனைவி மாதேஸ்வரி(39). இவர்களுக்கு நந்தினி (16), தமிழரசி (13) என இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்களில் நந்தினி 11ஆம் வகுப்பும், தமிழரசி 8 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர்.
இந்நிலையில், வியாழக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கணவன், மனைவி இருவரும் சாணி பவுடர் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இதில் மாதேஸ்வரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து அருகிலிருந்தவர்கள் ரவிசங்கரை மீட்டு திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இச் சம்பவம் குறித்து குன்னத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.