பின்னலாடை நிறுவனத்தில் ரூ.4 லட்சம் மோசடி: மேலாளர் கைது

திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் ரூ.4 லட்சம் மோசடி செய்த விற்பனைப் பிரிவு மேலாளர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார். 

திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் ரூ.4 லட்சம் மோசடி செய்த விற்பனைப் பிரிவு மேலாளர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார். 
திருப்பூர் மாவட்டம்,  குமரன் நகர் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான பின்னலாடை தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த எஸ்.ராஜேந்திரன் (37) என்பவர் விற்பனைப் பிரிவு மேலாளராகப் பணியாற்றி வந்தார்.  
நிறுவனத்தின் பின்னலாடைகளை நாமக்கல், சேலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு கொண்டுசென்று ராஜேந்திரன் விற்பனை செய்து வந்தார். 
இந் நிலையில், அந்த நிறுவனத்தில் நடைபெற்ற தணிக்கையின்போது, ரூ.4 லட்சத்து 7 ஆயிரத்தை ராஜேந்திரன் மோசடி செய்தது தெரியவந்தது. 
இதுகுறித்து பின்னலாடை நிறுவனத்தின் மேலாளர் ராஜா, திருப்பூர் மத்திய காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின்பேரில், காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து ராஜேந்திரனை  புதன்கிழமை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com