காவல் துறை அலுவலர்களுக்கான திறன் வளர்ப்புப் பயிற்சி

திருப்பூர் மாவட்ட காவல் துறை மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறை சார்பில் காவல் துறை அலுவலர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. 


திருப்பூர் மாவட்ட காவல் துறை மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறை சார்பில் காவல் துறை அலுவலர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. 
 திருப்பூர் மாவட்ட காவல் துறை, மாவட்ட சமூகப் பாதுகாப்புத் துறை, மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆகியத் துறைகள் இணைந்து காவல் அலுவலர்களுக்கான திறன் வளர்ப்புப் பயிற்சி முகாம் தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.
 இந்த பயிற்சி வகுப்பை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அ.கயல்விழி, பயிற்சியை தொடங்கிவைத்தார்.
 இதில், குழந்தைகளை எவ்வாறான சூழலில் வளர்க்க வேண்டும். குழந்தைகளை குற்றச்சம்பவங்களில் ஈடுபடாமல் பாதுகாப்பது தொடர்பாக பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இதில், மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் து.வசந்தகுமார், சி.சிவராஜ்மோகன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எம்.மாடசாமி, மதுரை சட்டக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர் எஸ்.சிவகுமார் மற்றும் காவல் துறையினர் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com