காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவிநாசியில் அமைதி ஊர்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.
அவிநாசி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து துவங்கிய ஊர்வலம் அவிநாசி பழையப் பேருந்து நிலையம், கோவை பிரதான சாலை, மேற்கு ரத வீதி, சேவூர் சாலை வழியாக வ.உ.சி. திடலை அடைந்தது.
இதைத் தொடர்ந்து, உயிர்நீத்த வீரர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந் நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள், பொதுநல அமைப்பினர், வணிக நிறுவனத்தினர், அனைத்துக் கட்சியினர், பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள், அனைத்து மதத்தினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கருப்புப் பட்டை அணிந்தும், மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினர்.