சேவூரில் ரூ.3 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிலக்கடலை ஏலத்தில் ரூ. 3 லட்சத்துக்கு வர்த்தகம் நடைபெற்றது.

சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிலக்கடலை ஏலத்தில் ரூ. 3 லட்சத்துக்கு வர்த்தகம் நடைபெற்றது.
சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 167 மூட்டைகள் கொண்டுவரப்பட்டன. குவிண்டால் ஒன்றுக்கு முதல் ரக நிலக்கடலை ரூ.5,400 முதல் ரூ 5,710  வரையிலும், இரண்டாவது ரக நிலக்கடலை ரூ. 5,150 முதல் ரூ.5,300 வரையிலும், மூன்றாவது ரக நிலக்கடலை ரூ. 4,600 முதல் ரூ. 4,900  வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.3  லட்சத்துக்கு ஏலம் நடைபெற்றது. இதில் 5 வியாபாரிகள், 12 விவசாயிகள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com