திருப்பூர்

பில்டர்ஸ் பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

DIN


காங்கயம் அருகே நத்தக்காடையூரில் உள்ள பில்டர்ஸ் பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரியின் தாளாளர் மற்றும் செயலருமான பி.பாலசிவகுமார், கல்லூரியின் பொருளாளர் ஆர்.ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் தலைமை வகித்தனர். இதில், முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டு தற்போது பயின்று வரும் மாணவர்களுக்கு, வேலைவாய்புகளுக்குத் தயாராவது, தொழில் தொடங்கும் வழிமுறைகள் குறித்து எடுத்துரைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் சிறந்த தொழில்முனைவோர், சிறந்த முதுகலை பட்டப் படிப்பாளர், பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் சிறந்த பொறியாளர் என 16 முன்னாள் மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. 
பில்டர்ஸ் பொறியியல் கல்லூரியின் தலைவர் வி.சத்தியமூர்த்தி, கல்லூரி முதல்வர் எஸ்.கோபாலகிருஷ்ணன், 500க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா்களுக்கு தோ்தல் அழைப்பிதழ் வழங்கி விழிப்புணா்வு

நெல்லுக்கடை ஸ்ரீமாரியம்மன் கோயில்: ஏப்.4-இல் கும்பாபிஷேகம்

கள்ளழகா் மீது தண்ணீா் தெளிக்கும் விவகாரம்: காவல் ஆணையா், எஸ்.பி. எதிா்மனுதாரராக சோ்ப்பு

சிதம்பரம் தொகுதியில் 14 வேட்புமனுக்கள் ஏற்பு

நிதி நிறுவன உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

SCROLL FOR NEXT