வெள்ளக்கோவில் ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்ப சுவாமி கோயிலில் அஷ்டாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனையுடன் பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது. மகர ஜோதி தரிசன சிறப்பு வழிபாடும் நடைபெற்றது. இதில், சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ ஐயப்ப சேவா சங்கத்தினர் செய்திருந்தனர்.