திருப்பூர்
பள்ளிகளில் பொங்கல் விழா
பிளாட்டோஸ் அகாதெமி, வேலவன் மெட்ரிக் பள்ளிகளில் பொங்கல் விழா அண்மையில் நடைபெற்றது.
பிளாட்டோஸ் அகாதெமி, வேலவன் மெட்ரிக் பள்ளிகளில் பொங்கல் விழா அண்மையில் நடைபெற்றது.
திருப்பூர் சின்னாண்டிபாளையத்தில் உள்ள பிளாட்டோஸ் அகாதெமி மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழாவுக்கு, பள்ளியின் நிர்வாக இயக்குநர் ஹரிகிருஷ்ணன் தலைமை வகித்தார். பள்ளி மாணவர்களின் கும்மி, ஒயிலாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகளும், போட்டிகளும் நடைபெற்றன. இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பள்ளி முதல்வர் மீராதேவி பரிசு, சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினார். இவ்விழாவில், பள்ளி அறங்காவலர் கிறிஸில்டா லோபஸ், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பலவஞ்சிபாளையத்தில் உள்ள வேலவன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. இதில், பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.