சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டி பல்லடத்தில் சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டி பல்லடத்தில் சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். 
பல்லடத்தில் சிஐடியு தொழிற்சங்கம், விவசாயகள், விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், பொதுவிநியோகத் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும், அத்தியாவசிய பொருள்கள் மீதான 
முன்பேர வர்த்தகத்தை தடுத்த நிறுத்த வேண்டும், வேலைவாய்ப்பை உருவாக்கவும், விவசாய விளை பொருள்களுக்கு சாமிநாதன் கமிட்டி பரிந்துரைப்படி விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
சிஐடியு செயலாளர் ப.கு.சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். இதில் மாநில குழு உறுப்பினர் சுப்பிரமணியம், விவசாய தொழிலாளர் சங்க மாநில துணைத் தலைவர் துரைசாமி, மாவட்ட செயலாளர் குமார், தலைவர் மதுசூதனன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பஞ்சலிங்கம், விசைத்தறி சங்க மாவட்டச் செயலாளர் முத்துசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com