வெள்ளக்கோவிலில் விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.60க்கு ஞாயிற்றுக்கிழமை கொள்முதல் செய்யப்பட்டது.
முத்தூர் சாலையில் உள்ள தனியார் கொள்முதல் மையத்தில் வாரந்தோறும் முருங்கைக்காய்கள் விற்பனைக்காக வாங்கப்படுகின்றன.
கடந்த இரண்டு மாதங்களாக வரத்து மிகவும் குறைவாக இருந்த நிலையில் தற்போது வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.
கடந்த வாரம் 400 கிலோ மட்டுமே வரத்து இருந்தது. இந்த வாரம் 1050 கிலோ வரத்து இருந்தது. மர முருங்கைக்காய், செடி முருங்கைக்காய் என இரு வகை காய்களையும் கிலோ ரூ.60க்கு வியாபாரிகள் வாங்கிச் சென்றனர். வரும் வாரங்களில் வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.