திருப்பூர்

அலகுமலை முருகன் கோயிலில் தைப்பூசத் தேரோட்டம்

DIN

அலகுமலையில் தைப்பூசத் திருநாளையொட்டி முத்துக்குமார பாலதண்டாயுதபாணிசுவாமி கோயிலில் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
பொங்கலூர் அருகே உள்ள அலகுமலையில் தைப்பூசத் திருநாளையொட்டி முத்துக்குமார பாலதண்டாயுதபாணி சுவாமி கோயில் தேர் திருவிழா மலையடிவாரத்தில் உள்ள பெரியநாயகி உடனமர் கைலாசநாதர் கோயில் முன்புள்ள மைதானத்தில் நடைபெற்றது.  
திருத்தேரில் வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார பாலதண்டாயுதபாணி சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சிக்குப் பின்னர் திருத்தேரை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வடம் பிடித்துத் தேரோட்டத்தைத் தொடங்கிவைத்தார். 
மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கயல்விழி, பல்லடம் சட்டப் பேரவை உறுப்பினர் கரைப்புதூர் ஏ.நடராஜன், முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன்,  மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவர் எம்.சண்முகம், பொங்கலூர் ஒன்றிய முன்னாள் தலைவர் எஸ்.சிவாசலம், இந்து அறநிலையத் துறை உதவி ஆணையர் ஹர்ஷினி, செயல் அலுவலர்கள் சங்கரசுந்தரேஷ்வரன், தீபா, கோயில் திருப்பணிக் குழுத் தலைவர் சின்னுக்கவுண்டர், எம்.கே.சுப்பிரமணியம், சிதம்பரம் உள்ளிட்ட விழாக் குழுவினர், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். 
சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெறன. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

SCROLL FOR NEXT