பேருந்து நிறுத்தத்தில் முதியவர் திடீர் சாவு

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் பேருந்து நிறுத்தத்தில் மதுரையைச் சேர்ந்த முதியவர் திடீரென கீழே விழுந்து திங்கள்கிழமை உயிரிழந்தார்.

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் பேருந்து நிறுத்தத்தில் மதுரையைச் சேர்ந்த முதியவர் திடீரென கீழே விழுந்து திங்கள்கிழமை உயிரிழந்தார்.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே செம்புகூடுபட்டியைச் சேர்ந்தவர் மார்க்கண்டன் (60). இவர் வெள்ளக்கோவிலில் உள்ள தனது மகள் முருகேஸ்வரி வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் அவர் ஊர் திரும்புவதற்காக கரூர் சாலை நடேசன் நகர் பேருந்து நிறுத்தத்தில் திங்கள்கிழமை நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென கீழே விழுந்ததில் இறந்துவிட்டார்.
இது குறித்து அவருடைய மனைவி பிச்சையம்மாளுக்கு வெள்ளக்கோவில் போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர். இறந்துவிட்ட  முதியவரின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக  காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.  இது குறித்து வெள்ளக்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com