திமுக வேட்பாளருக்கு உடுமலையில் வரவேற்பு

பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளருக்கு  உடுமலையில் திங்கள்கிழமை  வரவேற்பு அளிக்கப்பட்டது.

பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளருக்கு  உடுமலையில் திங்கள்கிழமை  வரவேற்பு அளிக்கப்பட்டது.
  பொள்ளாச்சி  மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கு.சண்முகசுந்தரம் திங்கள்கிழமை மாலை உடுமலைக்கு வந்தார். இவருக்கு மத்திய பேருந்து நிலையம் அருகே திமுக, அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில்  பட்டாசு வெடித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. திமுக, காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட  கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் வேட்பாளர்  கு.சண்முகசுந்தரத்துக்கு மாலை அணிவித்து வரவேற்றனர். இந்நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com