வெள்ளக்கோவிலில் சுவரொட்டிகள் ஒட்டியதாக மதிமுகவினர் மீது போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
வாய்க்கால்மேட்டுப்புதூரிலுள்ள பொதுத் தண்ணீர்த் தொட்டியில் அனுமதியின்றி மதிமுக சார்பில் தேர்தல் பிரசார சுவரொட்டிகள் சின்னத்துடன் ஒட்டப்பட்டிருந்தன.
இது தொடர்பாக மதிமுகவினர் மீது வெள்ளக்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.