தருமபுரி

தருமபுரி இஸ்கானில் கோவர்த்தன பூஜை

DIN

தருமபுரியில் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் (இஸ்கான்) சார்பில்  கோவர்த்தன பூஜை மற்றும் ஸ்ரீல பிரபுபாதர் மறைவு நாள் சிறப்பு வழிபாட்டு நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை (நவ.11) நடைபெற்றன.
தருமபுரியில் ஒட்டப்பட்டி பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ளது இஸ்கான் கிருஷ்ணர் கோயில். இங்கு ஞாயிற்றுக்கிழமை கோவர்த்தன பூஜையை முன்னிட்டு பகவான் ஸ்ரீ ராதாகிருஷ்ணர் மற்றும் பலராமருக்கு சந்தியா ஆரத்தியும், தொடர் ஆராதனைகளும் நடத்தப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் ஒசூர் இஸ்கான் தலைவர் சீனிவாச ஷியாம் தாஸ் பங்கேற்று,  ஸ்ரீமத் பாகவதம் பற்றிய சிறப்புச் சொற்பொழிவாற்றினார். இதில் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் தருமபுரி இஸ்கான் பொறுப்பாளர் சாய்ராம் பாபு மற்றும் ஆலய மேற்பார்வையாளர் சனாதன வேணுதாரி தாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

SCROLL FOR NEXT