கடத்தூர் நூலகத்துக்கு விருது

தருமபுரி மாவட்டம் கடத்தூர் கிளை நூலகத்துக்கு தமிழக அரசின் நூலக ஆர்வலர் விருது வழங்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம் கடத்தூர் கிளை நூலகத்துக்கு தமிழக அரசின் நூலக ஆர்வலர் விருது வழங்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நூலகத்தைப் பயன்படுத்தும் வகையில், நூலகத்தை மேம்படுத்தி, பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதைப் பாராட்டி இவ்விருது வழங்கப்பட்டது.
சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற குழந்தைகள் தின விழா மற்றும் டாக்டர் எஸ்.ஆர். ரங்கநாதன் விருது வழங்கும் விழாவில், கடத்தூர் கிளை நூலகர் சி. சரவணன் மற்றும் வாசகர் வட்டம் சார்பில் கோவிந்தராஜன் ஆகியோரிடம் இந்த விருதை மாநிலப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.  செங்கோட்டையன்
வழங்கினார் .
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com