பாலக்கோடு அருகே காடையாம்பட்டியில் வேளாண்துறை சார்பில் சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தி செய்யும் பயிற்சி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
பாலக்கோடு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பூ. சு. சித்ரா தலைமை வகித்து வேளாண் துறையில் உள்ள மானியத் திட்டங்கள் மற்றும் பிரதமரின் பயிர் காப்பீடு செய்வது குறித்து எடுத்துரைத்தார். வட்டாரத் தொழில்நுட்ப மேலாளர் மு. சிவசங்கரி வரவேற்றுப் பேசினார்.
வேளாண் பொறியியல் துறை இளநிலை பொறியாளர் செல்வகுமார், சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தி செய்வது மற்றும் பராமரிப்பு முறைகள், அதன் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார். பயிற்சியில் அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் அருள்குமார் மற்றும் அப்பகுதி விவசாயிகள், வேளாண் அலுவலர்கள் கலந்து
கொண்டனர்.