தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், இண்டூர் உள்வட்டம் எர்ரபையனஅள்ளி மற்றும் காரிமங்கலம் வட்டம், கம்பைநல்லூர் உள்வட்டம் கெலவள்ளி ஆகிய கிராமங்களில் வரும் நவ. 22-ஆம் தேதி மக்கள் தொடர்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.
எர்ரபையனஅள்ளியில் நடைபெறும் முகாமில், மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி கலந்துகொண்டு பொதுமக்களின் மனுக்களைப் பெற்றுக் கொள்கிறார். கெலவள்ளியில் நடைபெறும் முகாமில், மாவட்ட வருவாய் அலுவலர் எச்.ரஹமத்துல்லாகான் கலந்துகொண்டு பொதுமக்களின் மனுக்களைப் பெற்றுக் கொள்கிறார். சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த முகாம்களில் கலந்துகொண்டு தங்கள் குறைகளைத் தெரிவிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.