தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதியமான் சமூக வரலாற்று ஆய்வு மையத்தின் முப்பெரும் விழாவில் தொல்லியல் செய்தி மடல் வெளியிடப்பட்டது .
கால்நடை மருத்துவர் இரா. அறிவழகன் வெளியிட ஆசிரியர் ப. அறிவொளி பெற்றுக் கொண்டார். தொடர்ந்து சிறந்த பள்ளிக்கான மகுடம் விருதை பெற்ற நல்லாம்பட்டி அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர் ஆ.அன்பழகனுக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் எம்பி இரா. செந்தில் பாராட்டுரை வழங்கினார்.
தமிழும் சம்ஸ்கிருதமும் என்ற புத்தக ஆய்வுரை அரங்கில் கல்வெட்டு ஆய்வாளர் க. குழந்தைவேல், மையத்தின் செயலர் தி. சுப்பிரமணியன் ஆகியோரும் பேசினர். முப்பெரும் விழாவுக்கு வரலாற்றுத் துறை பேராசிரியர் (ஓய்வு) இ.பி. பெருமாள் தலைமை வகித்தார். முன்னதாக தகடூர் புத்தகப் பேரவையின் தலைவர் இரா. சிசுபாலன் வரவேற்றார்.
முடிவில் திருவள்ளுவர் பொத்தக இல்லத்தின் இயக்குநர் நெ.த. அறிவுடைநம்பி நன்றி கூறினார்.