அரூரில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 101-ஆவது பிறந்த நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
காங்கிரஸ் சார்பில், அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள இந்திரா காந்தியின் உருவ சிலைக்கு அந்தக் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.
இதில், வட்டாரத் தலைவர்கள் ஆர்.சுபாஷ், எம்.ஆர்.வஜ்ஜிரம், நகரத் தலைவர் கே.கணேசன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.