சீர்மரபினர் நல வாரிய உறுப்பினர்களை நியமிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

சீர்மரபினர் நல வாரிய உறுப்பினர்களை நியமிக்கக் கோரி, வீரபோயர் இளைஞர் பேரவை சார்பில்,  தருமபுரி மாவட்ட

சீர்மரபினர் நல வாரிய உறுப்பினர்களை நியமிக்கக் கோரி, வீரபோயர் இளைஞர் பேரவை சார்பில்,  தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாநில துணைத் தலைவர் ராஜேஷ் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் சின்னப்பன் முன்னிலை வகித்தார். மாநிலத் தலைவர் பு.ரா.சிவகாமி, மாநிலச் செயலர் மு.அருள் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இந்த  ஆர்ப்பாட்டத்தில், 1979- இல் தமிழக அரசு பிறப்பித்த அரசாணை எண் 1310-ஐ திரும்பப்பெற வேண்டும். சீர் மரபினர் நல வாரிய உறுப்பினர்களை நியமிக்க வேண்டும். ஈஸ்வரய்யா ஆணைய பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com