துண்டுப்பிரசுரம் விநியோகம்: அரசியல் கட்சிகள் மீது புகார்

அரூரில் சமூக செயற்பாட்டாளர் குறித்து அவதூறு துண்டுப் பிரசுரம் அச்சிட்டு விநியோகம் செய்ததாக காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகார் செய்யப்பட்டுள்ளது.

அரூரில் சமூக செயற்பாட்டாளர் குறித்து அவதூறு துண்டுப் பிரசுரம் அச்சிட்டு விநியோகம் செய்ததாக காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகார் செய்யப்பட்டுள்ளது.
சிட்லிங் மலை கிராமத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினரை  வழக்குரைஞர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் சிலர்அண்மையில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.  அப்போது, பொது அமைதிக்கு இடையூறு,  சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தியதாக சமூக செயற்பாட்டாளர்கள் கொ.வேடியப்பன், வளர்மதி, மகாலட்சுமி உள்ளிட்ட 4 பேரை கோட்டப்பட்டி கைது செய்தனர். இந்த நிலையில், சமூக செயற்பாட்டாளர் கொ.வேடியப்பன் கைது செய்யப்பட்டதை வரவேற்றும் அவதூறு செய்தும் துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.  இந்த துண்டுப்பிரசுரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என சமூக செயற்பாட்டாளர் கொ.வேடியப்பன் அளித்த புகாரின் பேரில், அரூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com