தருமபுரி மாவட்டம், கடத்தூர் கிளை நூலகத்தில் நூலக வார விழா மற்றும் நூல் அறிமுக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
கடத்தூர் முத்தமிழ் மன்றத் தலைவர் கோ. மலர்வண்ணன் தலைமை வகித்தார். வாசகர் வட்டத் தலைவர் மருத்துவர் வி. சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். நூலகர் சி. சரவணன் எழுதிய "ஒரு நூலகரின் டைரி குறிப்புகள்' என்ற புத்தகத்தை பொறியாளர் பி. நரசிம்மன் அறிமுகம் செய்து வைத்துப் பேசினார். இதைத் தொடர்ந்து, சிறந்த வாசகர்களுக்கு மாவட்ட மைய நூலக அலுவலர் ஜெ. கார்த்திகேயன் பரிசளித்துப் பேசினார். விழாவில், ஓய்வுபெற்ற ஆசிரியை தனலட்சுமி கடத்தூர் கிளை நூலகத்துக்கு ரூ. 1,000 செலுத்தி புரவலராக தன்னை இணைத்துக் கொண்டார். முன்னதாக, நூலகர் கி. நீலமேகன் வரவேற்றார். நூலகர் சி. சரவணன் நன்றி கூறினார். நூலக அலுவலர்கள், வாசகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.