தருமபுரி

நூல் அறிமுக விழா

DIN

தருமபுரி மாவட்டம், கடத்தூர் கிளை நூலகத்தில் நூலக வார விழா மற்றும் நூல் அறிமுக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
கடத்தூர் முத்தமிழ் மன்றத் தலைவர் கோ. மலர்வண்ணன் தலைமை வகித்தார். வாசகர் வட்டத் தலைவர் மருத்துவர் வி. சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். நூலகர் சி. சரவணன் எழுதிய "ஒரு நூலகரின் டைரி குறிப்புகள்' என்ற புத்தகத்தை பொறியாளர் பி. நரசிம்மன் அறிமுகம் செய்து வைத்துப் பேசினார். இதைத் தொடர்ந்து, சிறந்த வாசகர்களுக்கு மாவட்ட மைய நூலக அலுவலர் ஜெ. கார்த்திகேயன் பரிசளித்துப் பேசினார். விழாவில், ஓய்வுபெற்ற ஆசிரியை தனலட்சுமி கடத்தூர் கிளை நூலகத்துக்கு ரூ. 1,000 செலுத்தி புரவலராக தன்னை இணைத்துக் கொண்டார். முன்னதாக, நூலகர் கி. நீலமேகன் வரவேற்றார். நூலகர் சி. சரவணன் நன்றி கூறினார். நூலக அலுவலர்கள், வாசகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

SCROLL FOR NEXT