ஊத்தங்கரை அதியமான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின் 87-ஆவது பிறந்த நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சீனி.திருமால்முருகன், அதியமான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் சீனி.கலைமணி சரவணகுமார், நிர்வாக அலுவலர் சீனி.கணபதிராமன் ஆகியோர் கலந்து கொண்டு அப்துல் கலாமின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதைசெலுத்தினர்.
பின்னர் அப்துல் கலாம் பிறந்த நாளையொட்டி பேச்சுப்போட்டி, கவிதைப் போட்டி மற்றும் கட்டுரைப்போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி
பாராட்டினர்.